News Just In

1/01/2023 06:39:00 PM

சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து மலையகத்தில் போதைப்பொருள் மீட்பு! பலர் கைது!

வருட இறுதி விடுமுறையினை கழிப்பதற்காக பெரும் எண்ணிக்கையிலான் சுற்றுலா பிராயாணிகள் மலையகப் பகுதியினை நோக்கி படையெடுத்துள்ளார்கள்.

இதில் போதைப்பொருட்களுடன் சுற்றுலா வந்த எட்டு பேர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பிராயாணிகள் நுவரெலியா, எல்ல, சிவனொளிபாதமலை, பதுளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகளவிலான சுற்றுலா பிராயாணிகள் தொடருந்துகளின் மூலமே வருகை தந்துள்ளனர், இதனால் தொடருந்துகளில் நெரிசல் நிலை காணப்படுகின்றது.

மலையக பகுதிகளுக்கு போதைப்பொருட்களை கொண்டு வருவதனை தடுக்கும் நோக்கில் ஹட்டன் பொலிஸ் கோட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடருந்துகளில் வருபவர்களை ஹட்டன் தொடருந்து நிலையத்திலும் வாகனங்களில் வருபவர்களை கினிகத்தேனை கலுகல தியகல உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனை செய்யப்படுகின்றன.

இவ்வாறு சோதனை நடவடிக்கையின் போது நேற்றும் நேற்றுமுன்தினமும் 08 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து ஐஸ், கேரளகஞ்சா, மதனமோதக்கய, மாவா, ஐஸ் போதை மத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் இவர்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் கொழும்பு குருணாகல்,அனுராதபுரம்,உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

No comments: