
அபு அலா -
திருகோணமலை – குளிக்குஞ்சிமலை கிராமத்தில் வசித்துவருகின்ற மிக வறிய குடும்பங்களின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு காப்போம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் தலைமையில் குளிக்குஞ்சிமலை கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் நேற்று மாலை (16) இடம்பெற்றது.
குளிக்குஞ்சிமலை கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட மிக வறிய குடும்பங்களிலுள்ள 30 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப் பைகளை காப்போம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன், செயலாளர் கு.எப்சிதா, ஆலோசகர் க.ஞானேந்திரன் உள்ளிட்ட நிருவாக உறுப்பினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக, அக்கிராமத்தில் வசித்துவருகின்ற மாணவர்களுக்கு கடந்த ஒரு வருடகாலமாக மாலைநேர வகுப்புக்களை முற்றிலும் இலவசமாக காப்போம் நிறுவனத்தின் உதவியுடன் நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: