News Just In

12/05/2022 09:37:00 PM

பாலைநகர், மஜ்மா நகர், தியாவட்டவான் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்!





(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானைகள் தொடர்ந்தும் அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பயிர்கள் இருப்பிடங்களை போன்றவற்றை தினந்தோறும் சேதப்படுத்தி வருகின்றன.அத்துடன், மஜ்மா நகர் பகுதியில் வைத்து அண்மையில் 70 வயது நபர் ஒருவரும் யானை தாக்கி மரணமடைந்தார்.

அதேபோன்று, 3 ஆம் திகதி பாலைநகர், தியாவட்டவான் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த இரண்டு யானைகள் தியாவட்டவான் அறபா வித்தியாலயம் மற்றும் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரி சுற்றுமதில் மற்றும் பயிர்கள் போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளன.இவ்வாறு உட்புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து காட்டுப் பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இவ்வாறு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுத்து, யானை வேலிகளை அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


No comments: