News Just In

11/25/2022 09:50:00 AM

ராஜபக்சவின் குடும்ப நிகழ்வில் கலந்துகொண்ட ரணில்; கலந்துகொள்ளாத கோட்டா!



மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55வது நினைவேந்தல் நிகழ்வின் விசேட நினைவேந்தல் உரை நேற்று பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற போதிலும், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அதில் கலந்து கொள்ளாதமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில், மொட்டு கட்சி அலுவலகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில், கோட்டாபய ராஜபக்ஷவும் இதில் கலந்துகொள்வார் என குறிப்பிடப்பட்டிருந்தது.



இந்நிலையில் ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய சகோதரர்களான சமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.அத்துடன் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டார்.

இதேவேளை அண்மையில் இடம்பெற்ற மகிந்த ராஜபக்சவின் 74 ஆவது பிறந்த தின பொது நிகழ்வில் கோட்டாபய கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: