News Just In

9/22/2022 11:04:00 AM

பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களை வலுவூட்டும் செயலமர்வு !




நூருல் ஹுதா உமர்

இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தினால் "Empowering Widows and Women Headed Householders Through Sustainable Livelihood Program" எனும் கருப்பொருளின் கீழ் தெரிவு செய்யப்பட்டு வாழ்வாதாரம் வழங்கப்பட்ட குடும்பங்களின் சுயதொழில் முயற்சிகளை வலுவூட்டுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தொடரில், இரண்டாம் கட்ட செயலமர்வு இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எஸ். சுபுஹானின் நெறிப்படுத்தலில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் செவ்வாய் கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களை பொருளாதார ரீதியாக அவர்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்கிவித்து மேலும் வலுவூட்டுவதன் மூலம் நிலைபேறான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இச்செயலமர்விற்கு வளவாளர்களாக கலந்துகொண்ட பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமைத்துவம் மற்றும் தலைமைத்துவ ஆற்றலை வளர்ப்பதற்கான பயிற்சிகள் மற்றும் வியாபார உக்திகள், குழுச் செயற்பாடு, சேமிப்பு ஏன் முக்கியம், சவால்களை வெற்றி கொள்ளுதல்" என்பன பற்றிய விரிவுரை நிகழ்த்தினார்.

உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் "சிறந்த தொடர்பாடல் திறன்களை வளர்த்துக் கொள்ளல், நேர் சிந்தனையூடாக சவால்களை எதிர்கொள்ளலும்; மகிழ்ச்சிகரமான வாழ்க்கையும்"எனும் தலைப்பின் கீழ் விரிவுரை நிகழ்த்தினார். பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் ஆர்.எஸ். றிம்ஸியா ஜஹான், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ். சபறுல் ஹஸீனா, உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப் மற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட் ஆகியோர் கலந்துகொண்டு செயலமர்வை நடாத்தி வைத்தனர்.

மேலும் இச்செயலமர்வில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள், சிறுவர் ஆரோக்கிய பொதிகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.


No comments: