News Just In

9/26/2022 09:35:00 AM

டைட்டன்ஸ் கழகத் தொடரில் டைட்டன்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது...!



நூருள் ஹுதா உமர்

சம்மாந்துறை டைட்டன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் (2022.09.24,25) சம்மாந்துறை முகைடீன் விளையாட்டு மைதானத்தில்இடம்பெற்ற மென்பந்துக் கிரிக்கட் தொடரின் சம்பியனாக டைட்டன்ஸ் அணி தெரிவானது.

பிராந்தியத்தில் காணக்கப்படுகின்ற பிரபலமான 32 கழகங்கள் இத் தொடரில் பங்குபற்றின. விறு விறுப்பாகச் சென்ற இத்தொடரில் பல பலட்பரீட்சைகளை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குள் சம்மாந்துறை டைட்டன்ஸ் அணியும், சம்மாந்துறை நியுசன் அணியும் நுழைந்தன.

இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டைட்டன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. தொடர்ந்தும் 26 என்ற வெற்றியிலக்கை நோக்கி கழமிறங்கிய நியுசன் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 17 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டு தோல்வியடைந்தது.

இறுதியில் போட்டியில் அதிதிகளாக இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்fனான், சம்மாந்துறையின் சுலைமான் மோட்டார்ஸ் நிறுவன உரிமையாளர் பர்ஹார், டைட்டன்ஸ் கழகத்தின் செயலாளர் ரையிஸ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.




No comments: