News Just In

8/05/2022 06:39:00 AM

மட்டக்களப்பில் சீராக நடைமுறைப்படுத்தப்படும் கியூ ஆர் முறை எரிபொருள் வினியோகம்!

மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR விநியோகத் திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சீராக எரிபொருள் விநியோகம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அறிவுறுத்தலுக்கு அமைய இம்மாவட்டத்தில் உள்ள 17 சிபேட்க்கோ மற்றும் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் QR முறையில் நடைமுறைப்படுத்தப்பபட்டுவருகிறது.

இதற்கமைய மட்டக்களப்பு ஆரையம்பதி IOC எரிபொருள் நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்த ஆலோசனைக்குஅமைய நேற்று கஷ்ட பிரதேசங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் ஆரையம்பதி IOC எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகம் அதன் உரிமையாளர் கே.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

QR முறை முறை திட்டத்திற்கு அமைய இந்த விநியோக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இந்த விநியோகத்தில் மண்முனை வடக்கு, மண்முனைப் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மேற்பார்வை செய்தனர்.

(மொகமட் தஸ்ரிப் லத்தீப்)





No comments: