நாட்டில் இன்றைய தினம் (24-08-2022) மேலும் 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இறக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 25 & 26 வரையான காலப்பகுதியில் மற்றொரு ஒட்டோ டீசல் கப்பல் வரும் எனவும், ஓகஸ்ட் 27 & 29 திகதிகளில் ஒக்டேன் 92 பெற்றோல் கப்பல் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments: