News Just In

8/10/2022 11:06:00 AM

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பில் சாய்பாபா சிறுவர் சத்திர சிகிச்சை பிரிவு திறப்பு விழாவிற்கு வாழ்த்துச் செய்தி




(காத்தான்குடி நிருபர்)-

நாட்டில் பிறப்பில் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகும் சுமார் 1500 சிறார்களின் இருதய நோய்களுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் பாரிய சிகிச்சை நிலையம் ஒன்று மட்டக்களப்பு கிரான்குளத்தில் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது .

இந்தியாவின்ஸ்ரீ சத்யசாய்பாபா பவுண்டேஷன் இலங்கைஅரசின் சுகாதார அமைச்சுடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைய சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தசிறுவர் இருதய சத்திர சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சகோதரியும் முன்னாள் ஜனாதி பதி ஜெயவர்த்தனாவின் மருமகளுமான பெரிய ஜயவர்தனவின் முன் னெடுப்பில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த சத்திர சிகிச்சைக் கூடத்தி னை பகவான் சத்ய சாய் பாபாவின் சீடர் சுவாமி சத்குரு ஸ்ரீ மதுசுதன்சாய் வைபவ ரீதியாக இன்று திறந்து வைத்தார்

ஐக்கிய ராஜ்யத்தின் பிர்மிங்காம் நகரில் செயல் படும் பிரபல வைத்திய சாலையின் வைத்திய நிபுணர் குழுவே இந்த சிறுவர் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள விருக்கின்றமை குறிப்பிடத்தக்கது இலங்கையில் பிறப்பிலேயே சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இருதய நோய்க்கு உள் ளாகின்ரமை குறிப்பிடத்தக்கது.

இதில் சுமார் 1500 பேர் மாத்திரமே தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரியசிறுவர் சத்திர சிகிச்சை நிலையம் அமைந்துள்ள கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது சுமார் 1500 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த குறைபாடு தீர்த்துவைக்கும் வகையிலேயே ஸ்ரீ சத்ய சாய்பாபா சரணாலயத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு கிரான் குளத்தில் இந்த
சத்திர சிகிச்சை கூடம் செயல்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இது தவிர கிழக்கு மாகாணத்தில் சிறுநீரக நோய்க்குள்ளாவோர்களின் வசதி கருதி இந்த வைத்தியசாலையில் இ ரத்த சுத்திகரிப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ,வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்திய சாலைகளில் சேர்க்கப்படும் சிறுநீரக நோயாளிகளுக்கு இ இரத்த சுத்திகரிப்பு வசதி செய்வதற்கும் இ ங்கு வசதி செய்யப்பட்டுள்ளது

இந்த வைத்தியசாலையின் திறப்பு விழா பற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பி வைத்துள்ள செய்தி மடலில் நாடு எதிர்நோக்கும் பொருளாதார சிக்கலுக்கும் மத்தியில் சிறுவர்களுக்கான இருதய சத்திரசிகிச்சை கூடத்தை நிறுவுவதற்கு முன் வந்த பகவான் சாய்பாபா நிர்வாகத்தினருக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் இதுபோன்ற பல்வேறு வசதிகளை சாய்பாபா ஆலயம் திட்டமிட்டுள்ளதுபற்றி மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

திறப்பு விழா வைபவத்தின்போது இந்த சத்திரசிகிச்சை வசதிக்கு நேரடி யாக தொடர்புபடும் கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையின் பணிப் பாளர் வைத்திய நிபுணர் வைத்தியர் விஜேசூரிய கிழக்கு மாகாண சுகா தார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ ஆர் எம் தவ்பீக் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சுகுணன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் இரா முரளி ஸ்வரன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர். வீ கனகசிங்கம் உள்ளிட் டோருக்கு உறவின்போது இந்நிகழ்வின் போது பொன்னாடை போர்த் தியும் பதக்கங்கள் வழங்கியும் கௌ ரவிக்கப்பட்டது.

குறித்த வைத்தியசாலையில் ஏற்கனவே வெளிநோயாளர் பிரிவு வைத்திய சிகிச்சை கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









No comments: