News Just In

8/30/2022 05:40:00 PM

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கொழும்பையும் அதனை அண்மித்த பல பிரதேசங்களிலும் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக நீர் விநியோகத்தடை மேற் கொள்ளப்படவுள்ளது.

செப்டம்பர் 3 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மறுநாளான 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணி வரையான 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவெல மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா, பிரதேச சபைப் பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.

No comments: