VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • கரையொதுங்கிய சடலத்தை இனம் காணுமாறு பொலிஸார் வேண்டுகோள்.
    கரையொதுங்கிய சடலத்தை இனம் காணுமாறு பொலிஸார் வேண்டுகோள் (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) இலங்கையில் ஏற்பட்ட இயற்கை இடர் காரணமாக ஆண் ஒருவரின் ஒருவரது சடலம் ...
  • அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
    அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல் 2026 ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கும் திகதியை ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது குறித்த விடயத்...
  • மாவிலங்கன்துறை மற்றும் ஆரையம்பதி பிரதேச மக்களுக்கான வெள்ள நிவாரணம்
    மாவிலங்கன்துறை மற்றும் ஆரையம்பதி பிரதேச மக்களுக்கான வெள்ள  நிவாரணம் இலங்கை தமிழரசுக் கட்சியின் அகில இலங்கை வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன்...
  • மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS) வெள்ள நிவாரண உதவி!
     மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS)  வெள்ள நிவாரண உதவி வந்தாறுமூலை, மாவடிவேம்பு, களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த வெள்ளத்தினால...
  • சிங்களவர்கள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் கூறிய ஒரு வசனம்! வியப்பு காட்டும் தேரர்..
    சிங்களவர்கள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் கூறிய ஒரு வசனம்! வியப்பு காட்டும் தேரர்.. 30 வருடங்களாக போரை நடத்திக்கொண்டு, தன்னுடைய தலைம...
  • அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணகொடுப்பனவு : வெளியான அறிவிப்பு
    அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணகொடுப்பனவு : வெளியான அறிவிப்பு அரச அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டுக்காக 4,000 ரூபாயிற்கு மிகாத விசேட முற்பணத்தை வழ...
  • மீண்டும் திறக்கப்படும் வான்கதவுகள்.. மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நிரம்பிவழியும் நீர்த்தேக்கங்கள்
    மீண்டும் திறக்கப்படும் வான்கதவுகள்.. மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நிரம்பிவழியும் நீர்த்தேக்கங்கள் கடந்த 24 மணி நேரத்தில் பல ஆற்றுப் படுக...
  • கிழக்கில் உலுக்கிய சம்பவம் ; காதலனின் நண்பர்களால் கூட்டாக சீரழிக்கப்பட்ட இளம் பெண்
    கிழக்கில்   உலுக்கிய சம்பவம் ; காதலனின் நண்பர்களால் கூட்டாக சீரழிக்கப்பட்ட இளம் பெண் சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த ...
  • தமிழர் பகுதியொன்றில் தலைமறைவான எம்.பி
    தமிழர் பகுதியொன்றில் தலைமறைவான எம்.பி ; நீதிமன்றின் உத்தரவு நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று நிந்தவூர் பிரதேச சபைக்குள் உள்நுழைந்...
  • எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு
    எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News