VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • சினிமா பாணியில் அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி : எழுந்துள்ள சர்ச்சை
    சினிமா பாணியில் அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி : எழுந்துள்ள சர்ச்சை கம்பஹாவின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் பரிசளிப்பு விழா மேட...
  • மட்டக்களப்பில் 25 ஆயிரம் ரூபா வெள்ள நிவாரணத்தில் மோசடி!
    மட்டக்களப்பில் 25 ஆயிரம் ரூபா வெள்ள நிவாரணத்தில் மோசடி! மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வ...
  • கிரான் கோராவளி பிரதேசத்தில்.வீதி துண்டிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைநேரில் சென்றுபார்வையிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
    கிரான் கோராவளி பிரதேசத்தில்.வீதி துண்டிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை. பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு. நேரில் சென்றுபார்வையிட்டு. மக்களின் ...
  • நல்லூரை இடிக்கச் சொன்ன அர்ச்சுனா எம்.பி - கலவரத்தை தூண்டும் காணொளி - வலுக்கும் கண்டனம்
    நல்லூரை இடிக்கச் சொன்ன அர்ச்சுனா எம்.பி - கலவரத்தை தூண்டும் காணொளி - வலுக்கும் கண்டனம் சமயங்களுக்கு இடையில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான அ...
  • வீதிகளில் மிதக்கும் சடலங்களால் அதிர்ச்சியில் வாழும் மக்கள் - 2000 பேரின் பரிதாப நிலை
    வீதிகளில் மிதக்கும் சடலங்களால் அதிர்ச்சியில் வாழும் மக்கள் - 2000 பேரின் பரிதாப நிலை டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு காரணமா...
  • இலங்கையை நோக்கி புதிய காற்றுச் சுழற்சி ; யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரின் அதிர்ச்சி தகவல்
    இலங்கையை நோக்கி புதிய காற்றுச் சுழற்சி ; யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரின் அதிர்ச்சி தகவல் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையி...
  • மட்டு. ஆரையம்பதி பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
    மட்டு. ஆரையம்பதி பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீத...
  • திஸ்ஸ விகாரையில் முளைக்கும் புதிய புத்தர் சிலை - பாதுகாப்பு கோரி பறந்த கடிதம்
    திஸ்ஸ விகாரையில் முளைக்கும் புதிய புத்தர் சிலை - பாதுகாப்பு கோரி பறந்த கடிதம் எதிர்வரும் தைமாதம் மூன்றாம் திகதி பௌர்ணமி தினத்தில் வலி வடக்கு...
  • களுவாஞ்சிகுடியில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய வேன்; சாரதி வைத்தியசாலையில்!
    களுவாஞ்சிகுடியில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய வேன்; சாரதி வைத்தியசாலையில்! மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்...
  • கணிதப் பரீட்சையில் குறைவடைந்த புள்ளிகள்; மாணவிக்கு 160 தடவைகள் பிரம்படி கொடுத்த ஆசிரியர்
    கணிதப் பரீட்சையில் குறைவடைந்த புள்ளிகள்; மாணவிக்கு 160 தடவைகள் பிரம்படி கொடுத்த ஆசிரியர் கணிதப் பாடப் பரீட்சையில் புள்ளிகள் குறைந்ததாகக் கூற...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News