VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • நாளை முதல் பாடசாலை நேரங்களில் முற்றிலும் தடை
    நாளை முதல் பாடசாலை நேரங்களில் முற்றிலும் தடை பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாகத் தடை செய்யப்படும் என அறிவிக்கப்ப...
  • கோடீஸ்வரரான கருணா! மகிந்தவிடம் கருணாவின் மனைவி நிராவின் கருத்து !
    கோடீஸ்வரரான கருணா! மகிந்தவிடம் கருணாவின் மனைவி நிராவின் கருத்து  இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக உள்ள கருணா மீது எந்தவொரு விசாரணையும் முன்ன...
  • விடுதலைப் புலிகளிடம் இருந்த மொத்த கப்பல்கள்..! உண்மையை உடைத்த முன்னாள் கடற்படை அதிகாரி
    விடுதலைப் புலிகளிடம் இருந்த மொத்த கப்பல்கள்..! உண்மையை உடைத்த முன்னாள் கடற்படை அதிகாரி தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 26 கப்பல்கள் இருந்ததாகவும...
  • எல்ல பேருந்து சாரதியின் இரத்த பரிசோதனை! பொலிஸார் வெளியிட்ட தகவல்
    எல்ல பேருந்து சாரதியின் இரத்த பரிசோதனை! பொலிஸார் வெளியிட்ட தகவல் எல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்து ஓட்டுனரின் இரத்த மாதிரிகள், பரிசோத...
  • கொழும்பில் மகிந்தவிற்கு வீடு வழங்க முன்வந்த தமிழர் : எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்
    கொழும்பில் மகிந்தவிற்கு வீடு வழங்க முன்வந்த தமிழர் : எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் கொழும்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Ma...
  • மட்டக்களப்பில் பாடசாலை காணியில் ஆயுதங்கள்: அகழ்வு பணிகள் ஆரம்பம்
    மட்டக்களப்பில் பாடசாலை காணியில் ஆயுதங்கள்: அகழ்வு பணிகள் ஆரம்பம் மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில், உள்ள பழைய பாடசாலை ஒன்ற...
  • டக்ளஸ் தேவானந்தாவுக்கு பேரிடி; மலசல கூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி .... ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினர் பகீர் தகவல்
    டக்ளஸ் தேவானந்தாவுக்கு பேரிடி; மலசல கூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி .... ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினர் பகீர் தகவல் தினமுரசு பத்திரிகையின்...
  • இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சி
    இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சி (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்...
  • மகிந்தவுக்கு கொழும்பில் சொகுசு மாளிகை! ஜெர்மனி வாழ் தொழிலதிபர் அறிவிப்பு
    மகிந்தவுக்கு கொழும்பில் சொகுசு மாளிகை! ஜெர்மனி வாழ் தொழிலதிபர் அறிவிப்பு மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசாங்கம் வழங்கிய...
  • இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த மக்கள் - பிரதமர் ஹரிணியின் அறிவிப்பு
    இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த மக்கள் - பிரதமர் ஹரிணியின்  அறிவிப்பு இறுதிப் போரில் இடம்பெற்ற வெள்ளைக்கொடி சம்பவம் மட்டுமன்றி...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News