VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • மட்டக்களப்பில். புதிய கல்வி சீர்திருத்தத்துக் அமைய முதலாம் ஆண்டு மாணவர்களை உள்வாங்க திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
    மட்டக்களப்பில். புதிய கல்வி சீர்திருத்தத்துக் அமைய முதலாம் ஆண்டு மாணவர்களை உள்வாங்க திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. (மட்டக்களப்பு ம...
  • மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள்!
    மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத...
  • மட்டக் களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் !
    மட்டக் களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த  தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் !   ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட...
  • மக்கள் தெரிவு செய்தவரை நீக்கி புதியவரை நியமித்த பவானந்தராஜா எம்.பி; ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய பொதுமகன்!
    மக்கள் தெரிவு செய்தவரை நீக்கி புதியவரை நியமித்த பவானந்தராஜா எம்.பி; ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய பொதுமகன்! சுழிபுரம் - ...
  • மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2534 மில்லியன் பெறுமதியில் வீதிகளை மீளமைப்பதற்குத் திட்டம்!
    மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2534 மில்லியன் பெறுமதியில் வீதிகளை மீளமைப்பதற்குத் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பி...
  • அனைவரது கவனத்திற்கும் ஒரு முக்கிய அறிவிப்பு :
    அனைவரது கவனத்திற்கும் ஒரு முக்கிய அறிவிப்பு : வழக்கத்திற்கு மாறாக இவ்வாண்டுஆகஸ்ட் மாதம் வரை கடும் குளிர் நிலவும்....இன்று காலை 5:00 மணி முதல...
  • நாளை முதல் தொழிற்சங்க போராட்டத்தை தொடரும் அரச வைத்தியர்கள்!
    நாளை முதல் தொழிற்சங்க போராட்டத்தை தொடரும் அரச வைத்தியர்கள் சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதி...
  • கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் - நீதிமன்றின் உத்தரவு!
    கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் - நீதிமன்றின்  உத்தரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய ச...
  • கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!
    கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்; பொது அமைப்புகளுக்கு அழைப்பு அரசாங்கத்தினால் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவ...
  • ஆட்டம் காட்டும் ட்ரம்ப் - உலக சந்தையில் தங்க விலை வரலாறு காணாத உச்சம்!
    ஆட்டம் காட்டும் ட்ரம்ப் - உலக சந்தையில் தங்க விலை வரலாறு காணாத உச்சம் உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க ...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News