VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • SAFE அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி இன்று வழங்கி வைப்பு!
     SAFE அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி இன்று வழங்கி வைப்பு! குமுகாய மேம்பாட்டு மன்றம்-கிழக்கு(SAFE) அமைப்பின் வழிகாட்டுதலுக்கு அமைய கனடி...
  • வாழைச்சேனைநகருக்குள் யானை!
    வாழைச்சேனைநகருக்குள் யானை! ஒருவர் பலி, மூன்று பேருக்கு காயம்
  • இலஞ்சம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட இருவர் கைது!
    இலஞ்சம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட இருவர் கைது! தெஹியத்தகண்டி வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்று...
  • வடக்கு, கிழக்கில் 12 ஆம் திகதி முதல் மீண்டும் மழை; விவசாயிகளுக்கு வந்த முக்கிய அறிவுறுத்தல்
    வடக்கு, கிழக்கில் 12 ஆம் திகதி முதல் மீண்டும் மழை; விவசாயிகளுக்கு வந்த முக்கிய அறிவுறுத்தல் வடக்கு, கிழக்கு, மத்திய, வட மத்திய, ஊவா, மாகாணங்...
  • இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மட்டக்களப்புக்கு வருகை
    இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மட்டக்களப்புக்கு வருகை (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ உயர் அதிகா...
  • ஆகாயத்தில் பறக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்!
    ஆகாயத்தில் பறக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள் ;  இலங்கையின் பிரபல அரிசி ஆலை தொழிலதிபர்கள் இருவர் தமது தனிப்பட்ட தேவைகளுகாக வானூர்திகளை கொள்ளவனவ...
  • மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்தவரின் மறுபக்கம்; தேடிச்சென்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி
    மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்தவரின் மறுபக்கம்; தேடிச்சென்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளக...
  • தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு - காரணம் என்ன?
    தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு - காரணம் என்ன?  தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததால் வரும் தேர்தலில் தவெகவுக்கு...
  • யாழில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்கள்.. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி
    யாழில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்கள்.. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி இன்று அதிகாலை 1.18 மணியளவில் யாழ். மண...
  • ஏர் இந்தியா விமான விபத்து விமானி திட்டமிட்டு செய்தது - வெளியான அதிர்ச்சி தகவல்
    ஏர் இந்தியா விமான விபத்து விமானி திட்டமிட்டு செய்தது - வெளியான அதிர்ச்சி தகவல் ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி உள்நோக்கத்துடன் செய்ததாக...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News