VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! 21 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - அம்பலமான ஆதாரங்கள்
    ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! 21 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - அம்பலமான ஆதாரங்கள் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்ட...
  • கோலாகலமாக நடைபெற்ற “Women’s Excellence and Power of Women Iconic Award 2026” பட்டமளிப்பு விழா : 60 யுவதிகளுக்கு டிப்ளோமா மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு
    கோலாகலமாக நடைபெற்ற “Women’s Excellence and Power of Women Iconic Award 2026” பட்டமளிப்பு விழா : 60 யுவதிகளுக்கு டிப்ளோமா மற்றும் சான்றிதழ்கள...
  • மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கம்(EDS ) நடத்தும் தரம் 5(2027) மாணவர்களுக்கான இலவச வகுப்புகள்
     மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கம்(EDS ) நடத்தும் தரம் 5(2027) மாணவர்களுக்கான இலவச வகுப்புகள்  2027 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ப...
  • பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; ஈடுசெய்ய முடியாத இழப்பு
    பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; ஈடுசெய்ய முடியாத இழப்பு பிரபல பட்டிமன்ற நடுவரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா ...
  • துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட “கொண்ட ரஞ்சி” கைது!
    துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட “கொண்ட ரஞ்சி” கைது! துபாயிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ரஞ்சித் குமார என்ற "கொண்ட ரஞ்சி" என்ற...
  • பலாலியை மத்தளையுடன் ஒப்பிட முடியாது” – பிமல் ரத்நாயக்கவின் கருத்துக்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு.
    பலாலியை மத்தளையுடன் ஒப்பிட முடியாது” – பிமல் ரத்நாயக்கவின் கருத்துக்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு. பலாலியை மத்தளையுடன் ஒப்பிட முடியாது...
  • ஆபத்தில் நாமலே புலம்பிய இரகசியம்! இருவரை தீர்த்து கட்டிய மர்மம் - தப்பிய ஒருவர்
    ஆபத்தில் நாமலே புலம்பிய இரகசியம்! இருவரை தீர்த்து கட்டிய மர்மம் - தப்பிய ஒருவர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைப்பது கடினமாக இருக்கலாம் என அவர...
  • மாவடிப்பள்ளி ஆற்றில் இனந்தெரியாத ஆண் சடலம் கரையொதுங்கியது.!!
    மாவடிப்பள்ளி ஆற்றில் இனந்தெரியாத ஆண் சடலம் கரையொதுங்கியது.!! நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆ...
  • ஆதம் வீதிக்கு முதற்கட்ட கொங்கிரீட் பணிகள் நிறைவு : மாவடிப்பள்ளி ஆதம் வீதியின் நீண்டகால தேவைக்கு தீர்வு
    ஆதம் வீதிக்கு முதற்கட்ட கொங்கிரீட் பணிகள் நிறைவு : மாவடிப்பள்ளி ஆதம் வீதியின் நீண்டகால தேவைக்கு தீர்வு மாளிகைக்காடு செய்தியாளர் மாவடிப்பள்ளி...
  • எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவு எனக்கு சவாலல்ல : இலஞ்சம் பெற்ற மகனை அன்று தண்டித்திருந்தால் தந்தை இன்று அழ வேண்டியதில்லை - ஜனாதிபதி
    எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவு எனக்கு சவாலல்ல : இலஞ்சம் பெற்ற மகனை அன்று தண்டித்திருந்தால் தந்தை இன்று அழ வேண்டியதில்லை - ஜனாதிபதி எவரையும் பழ...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News