VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • உ/த பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் இன்று கௌரவிப்பு
    உ/த   பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் இன்று கௌரவிப்பு : மட்டக்களப்பு (EDS)கல்வி அபிருத்திச் சங்கத்தின் பழைய மாணவர் அமைப்பினால...
  • மட்டக்களப்பில் ஈவிரக்கமற்ற செயல்;புலனாய்வு பிரிவினர் முழங்காலில் இருக்க வைத்து சித்திரவதை
    மட்டக்களப்பில் ஈவிரக்கமற்ற செயல்;புலனாய்வு பிரிவினர் முழங்காலில் இருக்க வைத்து சித்திரவதை மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற ...
  • கிடப்பிலுள்ள தீர்க்கப்படாத பொதுப் பிரச்சினைகளை கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு முன்கொண்டு சமர்ப்பித்த இளைஞன்.
    கிடப்பிலுள்ள தீர்க்கப்படாத பொதுப் பிரச்சினைகளை கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு முன்கொண்டு சமர்ப்பித்த இளைஞன். (ஏ.எச்.ஏ.ஹுஸைன்) மட்டக்களப்...
  • உயர்தரத்தில் 3A பெற்ற யாழ் இந்துக் கல்லூரி மாணவன் திடீர் மரணம்!
    உயர்தரத்தில் 3A பெற்ற யாழ் இந்துக் கல்லூரி மாணவன் திடீர் மரணம்! அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற யாழ...
  • எரிபொருள் விநியோகம், புதன்கிழமை அரச விடுமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்
    எரிபொருள் விநியோகம், புதன்கிழமை அரச விடுமுறையில் ஏற்படவுள்ள மாற்றம் ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார...
  • இன்று மாபெரும் தாக்குதலுக்கு தயாரான அமெரிக்கா! பீட் ஹெக்ஸெத்தின் அறிவிப்பால் பெரும் பதற்றம்
    இன்று மாபெரும் தாக்குதலுக்கு தயாரான அமெரிக்கா! பீட் ஹெக்ஸெத்தின் அறிவிப்பால் பெரும் பதற்றம் போர் தொடங்கியதிலிருந்து ஈரான் மீது இன்றுதான் மிக...
  • கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
    கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்! கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் காலியாக உள்ள வலயக் கல்விப் பணி...
  • பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் பல கோடி ரூபா பணம் - பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
    பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் பல கோடி ரூபா பணம் - பொலிஸார் அதிரடி நடவடிக்கை ம் கொழும்பின் புறநகர் பகுதியில் 9 கோடி 37 இலட்சத்து 62 ஆயிரத்து...
  • ஈரானின் ஆணிவேரை குறிவைத்து தாக்குதல்.. உறுதிபடுத்தியது அமெரிக்கா!
    ஈரானின் ஆணிவேரை குறிவைத்து தாக்குதல்.. உறுதிபடுத்தியது அமெரிக்கா! ஈரானின் கார்க் தீவில் (Kharg Island) உள்ள இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா ...
  • ஈரானை மிரள வைத்த அதிரடி நடவடிக்கை! மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன ஆலையை அழித்த இஸ்ரேல்
    ஈரானை மிரள வைத்த அதிரடி நடவடிக்கை! மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன ஆலையை அழித்த இஸ்ரேல் ஈரானின் மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன ஆலையை இஸ்ரேல் அழித்த...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News