VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • விடுதலைப்புலிகளை யாரும் நினைவு கூர முடியாது ...! அநுர அரசு அறிவிப்பு
    விடுதலைப்புலிகளை யாரும் நினைவு கூர முடியாது ...! அநுர அரசு அறிவிப்பு உரிழந்தவர்களை நினைவு கூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்...
  • வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.!
    வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்; வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுத...
  • சாணக்கியன் நடவடிக்கையினால் திருகோணமலை விகாரைக் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது.
    சாணக்கியன் நடவடிக்கையினால் திருகோணமலைவிகாரைக் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் திருகோணமலை பகுதியில் எந்த வித அனுமதிகளும் இன்றி புத...
  • திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! சம்பவ இடத்திற்கு சென்ற அநுர தரப்பு எம்.பி விரட்டியடிப்பு
    திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! சம்பவ இடத்திற்கு சென்ற அநுர தரப்பு எம்.பி விரட்டியடிப்பு திருகோணமலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள புத்...
  • அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் அதிரடி நடவடிக்கை - வழங்கப்பட்டது உத்தரவு
    அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் அதிரடி நடவடிக்கை - வழங்கப்பட்டது உத்தரவு அனைத்து அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்...
  • திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை
    திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்த சம்பவத்தில் முக்கிய பங்கு வகி...
  • சிறுபான்மையின சமூகத்தின் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கான நியாயங்களைத் தேடுவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்!!
    பொது இடங்களில் முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்குத் தடை விதிக்கும் யோசனை எந்தவொரு அடிப்படையுமற்றது. எனவே இந்த யோசனையை இலங்க...
  • மகிந்தவால் தயார்படுத்தப்பட்ட பிக்குகள்.. சிக்கிய முக்கிய ஆதாரம்
    மகிந்தவால் தயார்படுத்தப்பட்ட பிக்குகள்.. சிக்கிய முக்கிய ஆதாரம் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தற்போது பேசுபொருளாகவுள்ள நிலையில், நாடாளுமன...
  • கடும் மழையால் அதிகரித்த வெள்ளம்; முகத்துவாரம் வெட்டப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ள நீர்!
    கடும் மழையால் அதிகரித்த வெள்ளம்; முகத்துவாரம் வெட்டப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ள நீர்! மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்...
  • புத்தர் சிலையை சேதப்படுத்தினால் கலவரம் ...! கடுந்தொனியில் எச்சரிக்கும் அரச தரப்பு
    புத்தர் சிலையை சேதப்படுத்தினால் கலவரம் ...! கடுந்தொனியில் எச்சரிக்கும் அரச தரப்பு இலங்கையில் புத்தர் சிலை விவகாரங்கள் அரசியலில் எவ்வாறான தாக...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News