VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • மட்டக்களப்பு கல்லடி பகுதியில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்து ஆலயத்தின் செயற்பாடு
    தமிழர் பகுதியில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்து ஆலயத்தின் செயற்பாடு தமிழர் பகுதியான மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் பலருக்கும் ந...
  • வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு
    வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி...
  • மட்டக்களப்பில் பாடசாலையில் வழங்கப்பட்ட கோழி கறி; 22 மாணவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!
    மட்டக்களப்பில் பாடசாலையில் வழங்கப்பட்ட கோழி கறி; 22 மாணவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் மட்டக்களப்பு - கரடியனாறு இந்து வித்தியாயலத்தில் கல்விகற்கு...
  • காத்தான்குடியில் மாணவிக்கு நடந்த கொடூரம் ; நீதி கோரும் பொலிஸார்
    காத்தான்குடியில்  மாணவிக்கு நடந்த கொடூரம் ; நீதி கோரும் பொலிஸார் மட்டக்களப்பு காத்தான்குடியில் 15 வயது மாணவி ஒருவர், சக மாணவனுடன் உரையாடியதை...
  • இலங்கையில் ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் தடை!
    இலங்கையில் ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் தடை! இலங்கையில், ஜூலை முதலாம் திகதி முதல் பிள்ளைகள் யாசகம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளத...
  • அரசாங்க பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
    அரசாங்க பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் அரசாங்க பாடசாலைகளில் ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிம...
  • ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியான அறிவிப்பு
    ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியான அறிவிப்பு ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கை பெற்றோலி...
  • காத்தான்குடி, மண்முனையில் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் முக்கிய தேடுதல் நடவடிக்கை!
    காத்தான்குடி, மண்முனையில் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் முக்கிய தேடுதல் நடவடிக்கை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்த...
  • ஒரே பாடசாலையில் மூன்று மாணவிகள் துஸ்பிரயோகம்; ஆடம்பர வீட்டில் அரங்கேறிய சம்பவம்
    ஒரே பாடசாலையில் மூன்று மாணவிகள் துஸ்பிரயோகம்; ஆடம்பர வீட்டில் அரங்கேறிய சம்பவம் ஒரே பாடசாலையில் படிக்கும் மூன்று மாணவிகளை தனது ஆடம்பர வீட்டி...
  • சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
    சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! 2024 (2025) இற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேற...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News