VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • சிறப்புற நடந்தேறிய கனகர் கிராம பயனாளிகளுக்கான வீடுகள் திறத்தல் நிகழ்வு!
    சிறப்புற நடந்தேறிய கனகர் கிராம பயனாளிகளுக்கான வீடுகள்திறத்தல்   நிகழ்வு! பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராமத்தில் இருந்து 1990 காலப்பகுதியில...
  • பொத்துவில் கனகர் கிராம மக்களும் கிழக்கு குமுகாய மேம்பாட்டு மன்றமும்(SAFE )
    பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைக்கப்பட்ட புதுமனைகள் திறப்புவிழா தொ டர்பாக  இது வெளியிடப்படுகின்றது     பொத்துவில்...
  • இலங்கையில் அடுத்த மாதம் முதல் சுழற்சி முறையில் மின்தடை? வெளியான முக்கிய அறிவிப்பு
    இலங்கையில் அடுத்த மாதம் முதல் சுழற்சி முறையில் மின்தடை? வெளியான முக்கிய அறிவிப்பு இலங்கையின் மின் உற்பத்தி கட்டமைப்பானது கடும் அழுத்தத்திற்க...
  • ஈரானின் இருதயத்தில் ஆட்டம் காட்டிய வல்லரசுக்கள்! வரலாறு காணாத அளவில் சரமாரியாக வீசப்பட்ட ஏவுகணைகள்
    ஈரானின் இருதயத்தில் ஆட்டம் காட்டிய வல்லரசுக்கள்! வரலாறு காணாத அளவில் சரமாரியாக வீசப்பட்ட ஏவுகணைகள் மத்திய கிழக்கு போர்க்களத்தில் கடந்த 24 மண...
  • ஈரானின் அவசர எச்சரிக்கை - உலகிற்கு இடியாக மாறிய ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு!
    ஈரானின் அவசர எச்சரிக்கை - உலகிற்கு இடியாக மாறிய ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு! ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையி...
  • சாதனை மாணவனை நேரில் சென்று பாராட்டிய சிறீதரன் எம்.பி!
    சாதனை மாணவனை நேரில் சென்று பாராட்டிய சிறீதரன் எம்.பி! க.பொ.த உயர்தர பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தினை சேர்ந்த ...
  • மட்டக்களப்பு கிணறு விவகாரம் ; அடுத்தடுத்து அவிழும் மர்ம முடிச்சுகள் ; கொழும்பில் சிக்கியவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
    மட்டக்களப்பு கிணறு விவகாரம் ; அடுத்தடுத்து அவிழும் மர்ம முடிச்சுகள் ; கொழும்பில் சிக்கியவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மட்டக்களப்பில் பெரு...
  • பொதுப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? பரீட்சைகள் திணைக்களம் விளக்கம்
    பொதுப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? பரீட்சைகள் திணைக்களம் விளக்கம் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற...
  • ஹோர்முஸ் நெருக்கடியால் உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக மாறிய இலங்கை
    ஹோர்முஸ் நெருக்கடியால் உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக மாறிய இலங்கை ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்ட இராணுவ நடவடிக...
  • யாழில் இருந்து புறப்பட்ட கடற்படை அதிகாரிகளின் இழிசெயல்! அதிரடியாக கைது
    யாழில் இருந்து புறப்பட்ட கடற்படை அதிகாரிகளின் இழிசெயல்! அதிரடியாக கைது பேருந்தில் ஏறிய பின்னர் மதுபோதையில் ஒழுங்கீனமான நடந்து கொண்ட மூன்று க...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News