News Just In

6/17/2022 02:34:00 PM

சவூதியில் மரணித்தவரின் சடலம் மூன்று மாதங்களின் பின்னர் வாகரைக்கு அனுப்பப்பட்டு அடக்கம்.




- ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

சவூதி அரேபியாவில் பணிபுரிந்த நிலையில் மரணித்தவரின் சடலம் மூன்று மாதங்களின் பின்னர் இலங்கை வாகரைக்கு அனுப்பப்பட்டு உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டது.

வாகரை பாடசாலை வீதியை அண்டி வசிக்கும் வேதாரணியம் சுதாகாரன் (வயது 38) என்பவரின் சடலமே வாகரை மயானத்தில் வியாழக்கிழமை 16.06.2022 அடக்கம் செய்யப்பட்டது.

இவர் சவூதி அரோபியாவில் பணிபுரிந்து வந்த சமயம் உடல் உபாதைக்குள்ளான நிலையில் இவ்வருடம் மார்ச் மாதம் 26ஆம் திகதி மரணமடைந்திருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

திருமணமாகாத இவர் கடந்த பல பத்தாண்டுகளாக சவூதி அரேபியாவிலேயே தொழில் வாய்ப்பைப் பெற்று பணியாற்றி வந்தவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments: