News Just In

5/13/2022 06:19:00 AM

‘கோட்டாகோகம’ ஆர்ப்பாட்டம் அப்படியே தொடர வேண்டும் : புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!

‘கோட்டாகோகம’ ஆர்ப்பாட்டம் அப்படியே தொடர வேண்டும் என்று கூறிய புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, (Ranil Wickremesinghe) ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸ் தலையிடாது என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டவுள்ளதாகவும், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு கட்டியெழுப்பப்பட்டு இளம் தலைமுறையினருக்கு சிறப்பான எதிர்காலம் உருவாக்கப்படும், ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: