இவ்வருடத்தின் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச தலைவர் மற்றும் பிரதமரின் இல்லத்தில் புத்தாண்டு சடங்குகள் மேற்கொள்ளப்படும் விதத்தை எந்தவொரு தொலைக்காட்சியும் நேரடியாக ஒளிபரப்பவில்லை என சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக பல சந்தர்ப்பங்களில், புத்தாண்டு சடங்குகளை பிரதமர் எவ்வாறு மேற்கொள்கிறார் என்பதை நேரடியாக ஒளிபரப்ப பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு செயற்பட்டு வந்தன.
ஆனால் இம்முறை அவர்களின் புத்தாண்டு பாரம்பரிய சடங்குகளை எந்தவொரு தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பவில்லை என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments: