உக்ரைனுக்கு 75கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கிய பின், ஏற்கனவே 170கோடி அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கிஉள்ளது.
இந்நிலையில் தற்போது மேலும் 75கோடி டொலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வழங்குகிறது.
அதன்படி பீரங்கிகள், கடலோர பாதுகாப்பு ஏவுகணைகள், இரசாயன மற்றும் அணு ஆயுத தாக்குதல்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்டவை உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை அமெரிக்கா இதுவரை வழங்கிய ராணுவ உதவிகளில் இது மிக அதிகபட்ச உதவி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: