இந்து கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் கலைமகளின் தெய்வீக கிராமிய நிகழ்வு மாத்தளை கந்தேநுவர தமிழ் வித்தியாலயத்தில் எதிர்வரும் 9ஆம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷவின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்களும், சிறப்பு அதிதியாக மாத்தளை இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சங்கீதா கோபிநாத் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், அதிதிகளாக இரத்தோட்ட பிரதேச சபை உபதலைவர் ஏ.ஆனந்தகுமார், மாஃகந்தேநுவர தமிழ் வித்தியாலய அதிபர் ஜே.நந்தரூபன், அருட்சொல் செம்மணி சைவ புலவர் ஜீவன் பிரசான், நித்திய அர்ச்சகர் பிரம்மஸ்ரீ இரமேஷ் குமார் சர்மா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments: