ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் மாட்டிறைச்சிக் கடைகளில் திடீரென விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நுகர்வோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஓட்டமாவடி பிரதேச சபை மாட்டிறைச்சியை விற்பனை செய்ய கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்துள்ள நிலையில், குறித்த பகுதியிலுள்ள சில மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள் விலைகளை அதிகரித்து விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த பகுதியில் ஒரு கிலோ மாட்டிறைச்சியின் விலை 1000, 1100, 1200 ஆகிய குழப்பமான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, இது தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபை உடனடியாக தலையீடு செய்து விலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று நுகர்வோர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
No comments: