வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடன் ஒருவன் திருடிச் சென்று அதனை விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவமொன்று நேற்று புதன்கிழமை (19) அதிகாலை 12 மணிக்குப் பின்னர் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை ரெயில்வே வீதியிலுள்ள வீடொன்றிலே மோட்டார் சைக்கிள் இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தனது வீட்டின் கதவை திறந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாமல் போயுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளை தேடி அலைந்த சைக்கிள் உரிமையாளர் முகநூல் பதிவொன்றின் உதவியுடன் மோட்டார் சைக்கிளை சேதமடைந்தை நிலையில் மீட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளை திருடன் திருடிச் சென்ற போது அது விபத்துக்குள்ளானதில் திருடன் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதுடன், சம்மவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
No comments: