News Just In

1/05/2022 06:17:00 AM

2022 ம் ஆண்டு புதுவருடத்தை முன்னிட்டு சர்வ மத வழிபாடுகளுடன் இலங்கை விமானப்படையின் புதுவருட வேலைகள் ஆரம்பம்!

மலர்ந்த 2022 புத்தாண்டை தொடர்ந்து விமானப்படை தலைமை காரியாலயத்தில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் பங்கேற்பில் சர்வ மத வழிபாடுகளுடன் இலங்கை விமானப்படையின் புதுவருட பணிகள் கடந்த 2022 ஜனவரி 03ம் திகதி பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது விமானப்படை தளபதியினால் புதுவருட உரை நிகழ்த்தப்பட்டது இவை அனைத்தும் வீடியோ தொழில்நுட்பம் மூலம் அனைத்து விமானப்படைத்தளங்களுக்கும் நேரடியாக ஒளிபரப்பட்டது தனது உரையின்போது 2022 ம் ஆண்டு புதுவருட வாழ்த்துக்களை முதலில் தெரிவித்து கடந்த 2021 ஆண்டு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு சிறப்பாக செயற்பட்டமைக்கு அணைத்து விமானப்படை அங்கத்தவரக்ளுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார் மேலும் மலர்ந்திருக்கும் புதிய வருடத்தில் நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டவும் நாட்டை கட்டியெழுப்பவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டுமென்று அவர் தெரிவித்தார்

புதுவருடத்தை முன்னிட்டு விமானப்படை அங்கத்தவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உலகவாழ் மக்கள் அனைவருக்கும் ஆசி வேண்டி விமானப்படை தலைமயக்கத்தில் இரவுநேர பிரித்து பூஜை வழிபாடுகள் கங்காராம விகாரையின் விஹாராதிபதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி நாயக தேரர் அவர்களில் தலைமையில் கடந்த 2022 ஜனவரி 02ம் திகதி இடம் பெற்றதுடன் அதனைத்தொடர்ந்து 2022 ஜனவரி 03 ம் திகதி சர்வ மத தலைவர்களினால் பிராத்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் சிவில் ஊழியர்கள் உற்பட அனைவரும் பங்கேற்றனர்.









No comments: