மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சந்தனமடு ஆற்றில் இருந்து சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் வழங்கிய புகாரையிட்டு அதனை பார்வையிட இன்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறித்த பிரதேசதிற்கு அப்பகுதி மக்கள், விவசாய அமைப்புக்கள் சகிதம் இன்று(16.09.2021) சென்றார்.
அவ்விடத்திற்கு சென்று மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசன பொறியியலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வீதி புனரமைப்பிற்கு ஏதாவது அனுமதி வழங்கியதா? என வினவிய போது அவர்கள் அனைவரும் எதுவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.
ஆகவே இந்த மண் அழ்வானது முற்றுமுழுதாக சட்டவிரோதமாக இடம்பெறுகின்றது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்ற அமர்வின் போது மாலைதீவிற்கு மண் ஏற்றுமதி செய்யப்படுவதாக நான் கூறிய போது அதனை குறித்த விடயதான அமைச்சர் அதனை நிரூபித்தால் நான் பதவி விலகுவேன் என தெரிவித்தார். ஆனால் மாலைதீவிற்கு மண் அனுப்பப்படுவதை புவிச்சரிதவியல் பணியகம் உறுப்படுத்தியுள்ளது. ஆகவே நான் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சாத்திரம் சொல்பவரைப்போல் இவற்றை எல்லாம் கண்டுபிடித்து சொல்ல வேண்டி உள்ளது எனவும், இங்கிருந்து மண் அகழ்வில் ஈடுநட்டவர்கள் உடனடியாக இந்த பகுதியை நிரப்பி கொடுப்பதுடன், அழிக்கபப்பட்ட பனம் கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்ய வேண்டும். இல்லாவிடின் மக்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
No comments: