News Just In

8/22/2021 08:31:00 PM

முற்றாக முடங்கியது திருகோணமலை...!!


(ஹஸ்பர் ஏ ஹலீம் )
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முமுவதும் எதிர்வரும் 30 ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்ட நிலையில் .
திருகோணமலை மாவட்டத்தில் சகல வர்த்தக நிலையங்களும் இன்றும் (22)மூடப்பட்டு முமு நகரமும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

திருகோணமலை மத்திய பேரூந்து நிலையம், பொது சந்தை கட்டிடத் தொகுதி, மொத்த சில்லறை விற்பனை நிலையங்கள், கட்டட பொருட்கள் விற்பனை நிலையங்கள் உட்பட ஹோட்டல்களும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் திருகோணமலை, உப்புவெளி, மூதூர், கிண்ணியா, குச்சவெளி, வெருகல், தம்பலகாமம், உட்பட முழு பிரதேசங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டது.







No comments: