News Just In

8/08/2021 07:21:00 PM

வந்தாறுமூலையில் இடம்பெற்ற பாரிய விபத்து- மூவர் படுகாயம்...!!


மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியின் வந்தாறுமூலை பகுதியில் இன்று(8) இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தானது மழை பெய்து கொண்டிருந்த வேளை எதிரெதிரே பயணித்துக்கொண்டிருந்த சிறியரக லொறியும் பிக்கப் வண்டியொன்றும் மோதி நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.









No comments: