News Just In

8/09/2021 09:00:00 PM

வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயத்தின் 177 வது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!!


மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயத்தின் 177 வது வருடாந்த திருவிழாவானது கடந்த 30.07.2021 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி அன்னதாசன் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நவநாட்களில் மாலை 5.30 மணிக்கு திருச் செபமாலையும் அதனை தொடர்ந்து திருப்பலியும் இடம்பெற்றதுடன், கடந்த 06.08.2021 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு ஆயரின் தலைமையில் திவ்விய நற்கருணை, உறுதிபூசுதல் திருவருட்சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த (08) திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்ற ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதிநாள் திருவிழா கூட்டுத்திருப்பலியின் நிறைவில் அன்னையின் ஆசீரைத் தொடர்ந்து ஆலய திருவிழா கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவுபெற்றது.














No comments: