News Just In

7/04/2021 03:47:00 PM

களிமண் ஏற்றுவதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் பிரதேச செயலாளருக்கு வழங்கப்படவுள்ளது...!!


மாதத்திற்கு 03 கியூப் வீதம் களிமண்ணை ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கும் அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மட்பாண்ட உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக பிரம்பு, பித்தளை, மட்பாண்டங்கள், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் விஜித்த பண்டாரநாயக்க தெரிவித்தார்.


இதற்கு முன்பு ஒரு கியூப் களிமண்ணிற்கும் அதிகமாக ஏற்றப்பட வேண்டுமாயின் அதற்கு புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் அனுமதி அவசியமாகும்.

இந்த நடைமுறைகளினால் தாம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக மட்பாண்ட உற்பத்தியாளர்கள் இராஜாங்க அமைச்சிடம் கூறியுள்ளனர்.

இதனிடையே, மாதாந்தம் 6 கியூப் களிமண்ணை ஏற்றுவதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.

இந்த அனுமதி வழங்கப்படுமாயின் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு முழுமையான தீர்வு எட்டப்படும் என இராஜாங்க அமைச்சின் செயலாளர் விஜித்த பண்டாரநாயக்க மேலும் கூறியுள்ளார்.

No comments: