News Just In

7/03/2021 07:11:00 AM

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 19பேருக்கும்- நட்சத்திர விடுதிக்கும் ஏற்பட்ட நிலை...!!


நாட்டில் பிறந்தநாள் மற்றும் திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அல்லைப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற 19 பேர் நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முற்பட்டுள்ளனர்.

அதனை அறிந்த அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், ஊர்காவற்றுறை பொலிஸாருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அந்த விடுதியிலேயே சுயதனிமைப்படுத்தினார்.

அத்துடன், நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

சுயதனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

No comments: