News Just In

7/23/2021 01:55:00 PM

வார இறுதி நீண்ட விடுமுறையில் 10,000 காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கையில்...!!


நாட்டில் இன்று(23) முதல் ஆரம்பமாகியுள்ள வார இறுதி, நீண்ட விடுமுறையில் 10,000 காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாகாண எல்லைகளில் மேலதிக காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இதன்போது பயணக்கட்டுப்பாடுகளை மீறி பயணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: