ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறை தீவுப் பகுதியில் மீன்பிடிப்பதற்காகச் சென்றோரில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணத்தைத் தழுவியதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை 13.06.2021 மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொம்மாதுறை கிராமத்தைச் சேர்ந்த புனிதராஜ் அனோஜன் (வயது 18) மற்றும் முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த பற்குணராஜா ஜனோஜன் (வயது 16) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
பொழுது போக்கிற்காக இவர்கள் மீன்பிடிக்கச் சென்று பின்னர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கியுள்ளனர்.
சம்பவமறிந்து உதவிக்கு விரைந்தோரால் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
செங்கடிலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள சடலங்கள் உடற்கூறாய்வுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
No comments: