News Just In

2/28/2021 03:20:00 PM

தேங்காய் விலை தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு விடுத்த மகிழ்ச்சியாக அறிவிப்பு..!!


தேங்காயின் விலை எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்பிரல் மாதங்களில் குறைவடையுமென பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

போதியளவு மழை இல்லாமையினால் கடந்த வருடம் தேங்காயின் விளைச்சல் குறைவடைந்திருந்ததாக அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவா விதாரன தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக கடந்த காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எண்ணெய் உற்பத்திக்காக தேங்காய் துண்டுகளை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவா விதாரன தெரிவித்துள்ளார்.

No comments: