News Just In

2/01/2021 06:14:00 AM

மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை- வர்த்தமானி வெளியாகியது!!


ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளன.

இந்த தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுச்சூழல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 20 மில்லிமீற்றர் அல்லது 20 கிராம் நிறைக்கு குறைவான சிறிய பைகள், காற்றடைக்கப்படக் கூடிய விளையாட்டு பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு பிளாஸ்டிக் காம்புகளுடனான கொட்டன் பட்ஸ் ஆகியனவும் குறித்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: