News Just In

12/22/2020 07:29:00 PM

பண்டிகை காலத்தில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்!!


பண்டிகை காலத்தில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த, இதுவரை எந்தவொரு தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன், தற்போது தனிமைப்படுத்தப்பாட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை, தனிமைப்படுத்துவதற்கு தீர்மானிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ, சட்டங்களை அமுல்படுத்துவதற்கோ எதிர்பார்க்கவில்லை என ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட சுகாதாரத் தரப்பினர் மேற்கொள்வர்கள் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளார்

No comments: