News Just In

12/31/2020 06:48:00 PM

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43123ஆக அதிகரிப்பு- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35329ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் மேலும் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 43123ஆக அதிகரித்துள்ளதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35329ஆக அதிகரித்துள்ளது.

இத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான 199 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் 7595 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: