News Just In

2/16/2020 09:09:00 AM

வாராந்த விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை!

வாராந்த விடுமுறை நாட்களை முன்னிட்டு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

கொழும்பு கோட்டை- -பதுளை மற்றும் பதுளை- - கொழும்பு கோட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் இந்த விசேட ரயில் சேவை நடைபெறவிருப்பதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது..

இதற்கமைவாக இலக்கம் 01 ரயில் இந்த காலப்பகுதியில் இரவு 7.35மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.50மணிக்கு பதுளை ரயில் நிலையத்தை சென்றடையும்.

அதேபோன்று இலக்கம் 02 ரயில் இரவு 8.30 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 5.27 மணியளவில் கொழும்பு கோட்டை நிலையத்தை வந்தடையும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments: