பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சம்பவதினமான நேற்று இரவு 8 மணியளவில், வவுணதீவு - காந்திபுரம் சந்தியில், பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெகஸ்டர் அஜத் ஆகியோர் தலைமையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது, பனையறுப்பான் பிரதேசத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்துக்கு மோட்டார் சைக்கிளில், கலன் ஒன்றில் 15 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பை எடுத்துச் சென்ற பனையறுப்பான் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.
இதன்பின்னர், இதே பிரதேசத்தில் சைக்கிளில் ஆயிரத்து 500 லீற்றர் கசிப்பை எடுத்துச்சென்ற காந்திநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments: