News Just In

2/14/2020 09:20:00 PM

யாழ் பல்கலையில் பாலியல் பகி­டி­வ­தையில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு அர­சாங்கம் உச்­சக்­கட்ட தண்­டனை!


யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் பாலியல் பகி­டி­வ­தையில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு அர­சாங்கம் உச்­சக்­கட்ட தண்­டனை வழங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என மலை­யகம் மற்றும் கிழக்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பெண் அங்­கத்­த­வர்­களின் சந்­திப்­பின்­போது அவர்கள் கூட்­டாக இணைந்து அர­சாங்­கத்­திடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

கண்டி மாவட்­டத்தின் பன்­விலை பிர­தேச சபை உறுப்­பி­னர்­க­ளுக்கும் கிழக்கின் அம்­பாறை மாவட்­டத்தின் காரை­தீ­வுப்­பி­ர­தேச சபை உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடையே பரஸ்­ப­ர­மாக கருத்­துப்­ப­ரி­மாறும் சந்­திப்பு நேற்­று­முன்­தினம் காரை­தீவு பிர­தேச சபையில் நடை­பெற்­றது

சர்­வ­தேச பெண்­ணு­ரி­மைகள் செயற்­பாட்­டா­ளரும் இலங்கை பெண்கள் ஒத்­து­ழைப்பு முன்­ன­ணியின் தலை­வி­யு­மான திரு­மதி லோகேஸ்­வரி சிவப்­பி­ர­காசம் ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்த சந்­திப்பில். கண்டி பன்­விலை பிர­தே­ச­ சபை பெண் அங்­கத்­த­வர்­க­ளான எஸ்.விஜ­ய­மாலா கே.சர்­மிளா எஸ்.பிர­மிளா மற்றும் பெண் உரிமை செயற்­பாட்­டாளர் எஸ்.தாரணி காரை­தீவு பிர­தே­ச­ ச­பைத்­த­வி­சாளர் கிருஸ்­ண­பிள்ளை ஜெய­சிறில் மற்றும் உறுப்­பி­னர்­க­ளான சின்­னையா ஜெய­ராணி உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டனர்.

அர­சி­யலில் பெண்­களின் 25 சத­வீத ஒதுக்­கீட்­டு­ட­னான பங்­க­ளிப்பு அபி­வி­ருத்தி தொடர்பில் பிர­தே­ச­வா­ரி­யாக எவ்­வாறு கையா­ளப்­ப­டு­கின்­றன என்­பது தொடர்பில் கருத்­துகள் பரி­மா­றப்­பட்­டன. காரை­தீவு பிர­தே­ச­ சபை உறுப்­பினர் ஜெய­ராணி, தம்மைப் பொறுத்­த­வரை நிதி­யொ­துக்­கீடு முதல் சகல செயற்­பா­டு­க­ளிலும் தான் சம்­பந்­தப்­ப­டு­வ­தா­கவும் பெண்­ணு­ரிமை பேணப்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

அத­னை­யிட்டு தலைவி லோகேஸ்­வரி சிவப்­பி­ர­காசம் மற்றும் உறுப்­பி­னர்கள் சபைத்­த­வி­சாளர் ஜெய­சி­றி­லுக்கு பாராட்டும் நன்­றியும் தெரி­வித்­தனர். பெண்கள் நாட்டின் கண்கள் ஆனால் அவர்­க­ளது மானத்தை வைத்து அவர்­க­ளது செயற்­பா­டு­களை மழுங்­க­டிக்­கப்­பார்க்­கி­றார்கள்.

அதற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. நாம் வடக்கு, கிழக்கு, மலை­யகம் எனப்­பி­ரிந்து செயற்­ப­டாமல் அனை­வரும் குறிப்­பாக சிறு­பான்­மை­யின பெண் அங்­கத்­த­வர்கள் ஒரே குடையின் கீழ் இணைந்து செயற்­பட முன்­வ­ர­வேண்டும் எனப் பொது­வாக பலரும் எடுத்­து­ரைத்­தனர். பாலியல் பகி­டி­வதை தொடர்பில் பெண்­ணு­ரிமை செயற்­பாட்­டாளர் திரு­மதி லோகேஸ்­வரி சிவப்­பி­ர­காசம் கூறு­கையில், கற்­ற­றிந்த சமூகம் மிகவும் வெட்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மிது. இத்­தோடு இச்­சம்­பவம் முற்­றுப்­பெ­ற­வேண்டும். இது தொடர விடக்­கூ­டாது.

அர­சாங்கம் தகுந்த நட­வ­டிக்கை எடுப்­ப­தாகக் கூறி­யுள்­ளது. தப்பு செய்­தவன் தண்­டிக்­கப்­பட வேண்டும். அதில் தய­வு­தாட்­சண்யம் காட்­டப்­ப­டக்­கூ­டாது என்றார். இதே­போன்று கல்­மு­னையில் தாதிய சிரேஷ்ட பெண் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் பாலியல் ரீதி­யிலும் நிரு­வாக அரா­ஜ­க­ரீ­தி­யிலும் துன்­பு­றுத்­தப்­பட்­டுள்ளார் என்ற செய்­தி­யை­ய­றி­கிறோம்.

பெண் என்ற கார­ணத்­தினால் இந்த அடக்­கு­மு­றையைப் பிர­யோ­கித்­துள்­ளனர் எனத்­தெ­ரி­கி­றது. சுகா­தார அமைச்சு, சுகா­தார திணைக்­களம், மனித உரி­மைகள் ஆணைக்­குழு இதற்கு தக்க நீதி வழங்­க­வேண்டும். பாலி­யல்­இம்சை புரிந்­த­தா­கக்­கூறும் தாதியர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும். மேலும் நிருவாகத்தை பாரபட்சமாக செய்த அதிகாரிக்கு சட்டரீதியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தவறினால் இலங்கைபூராக பெண்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெறும். சர்வதேச அமைப்புகளுக்கும் அறிவிப்போம். என்று தெரிவிக்கப்பட்டது. மனிதஅபிவிருத்தி தாபன வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்த், ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டார்.

No comments: