News Just In

2/15/2020 11:00:00 AM

வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 200 கோடியை தாண்டியது!

உலகளவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை கடந்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு வாட்ஸ்அப்பை பேஸ்புக் நிறுவனம் வாங்கியதனை தொடர்ந்து 2017 ஜுலை மாதத்தில் பயனர்கள் எண்ணிக்கை 100 கோடியை கடந்தது.

2018ஆம் ஆண்டில் இது 150 கோடியாக அதிகரித்தது. இந் நிலையில், தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரபூர்வமாக தன்னுடைய பயனர்களின் எண்ணிக்கை குறித்து அறிவித்துள்ளது.

அதன்படி உலகளவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை கடந்துள்ளது.

No comments: