News Just In

1/31/2020 05:45:00 PM

சாரதி அனுமதிப்பத்திரம் வெளியிடும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரம் வெளியிடுவதனை நாளைய தினம் இடைநிறுத்தவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை காலமும் சாரதி அனுமதிப் பத்திர வெளியீட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த அமைப்பில் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல் பணிகள் காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர கிளையில் சாரதி அனுமதிப் பத்திர வெளியீட்டினை நாளைய தினம் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments: