News Just In

12/29/2019 09:45:00 AM

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச கலாசார விழா

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும், கிழக்கு மாகண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும், இணைந்து நடாத்திய பிரதேச கலாசார விழாவும், இலக்கிய விழாவும் 2019 களுதாவளை கலாசார மண்டபத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றது ,

இவ் நிகழ்விற்கு மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் கொரவ தவிசாளர் தலைமை அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். 2019 ஆண்டிற்கான பிரதேச இலக்கிய விழாவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன, 

மேலும் கலை இலக்கிய துறையில் பல சாதனைகளை நிலைநாட்டிய பிலதேச மூத்த கலைஞர்களுக்கும், இளைய கலைஞர்களுக்கான விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் பல கலைஞர்களும் கலை ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்ததுடன் பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.












No comments: