News Just In

11/01/2019 01:51:00 PM

அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ISIS

ISIS தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியைக் கொலை செய்ததற்காக மகிழ்ச்சி அடைய தேவையில்லை என்று அமெரிக்காவை ISIS எச்சரித்துள்ளதுடன் தங்களது தாக்குதல்கள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

ISIS இயக்கத்தின் புதிய தலைவராக அபூ இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ISIS இயக்கத்தின் தலைமையை கொன்றமைக்காக சந்தோசப்படவேண்டாமென அமெரிக்காவை எச்சரித்துள்ள ISIS பேச்சாளர் அபூ ஹசன் அல் முஹாஜிர், மத்திய கிழக்குக்கு வெளியேயும் தமது தாக்குதல்கள் தொடருமென சுட்டிக்காட்டியுள்ளார்.

ISIS இயக்கத்தின் செய்தி நிறுவனமான அமாக் வெளியிட்டுள்ள ஒலிநாடாவில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

No comments: