இலங்கை விமான எல்லைப் பகுதிக்குள் விமான சுற்றோட்ட சேவையை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள பொறுப்பை விமான நிலையம் மற்றும் இலங்கை விமான சேவை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக விமான சுற்றோட்ட சேவை விமானம் சார்ந்த தொடர்பாடல் மற்றும் விமான சார்ந்த சுற்றோட்ட சேவை 2 பிரிவுகளை கொண்டிருப்பதுடன் இலங்கை விமான வலையத்தில் 6 இலட்சம் கடல் மைல் வரைக்குள் 14 விமான பாதைகள் முழுவதும் விமானங்களுக்கு தேவையான வழிகாட்டி மற்றும் சமிக்ஞை மற்றும் ஏனைய சேவைகள் வழங்கப்படும்.
இலங்கை விமான வலையத்திற்கு வடக்கில் இந்தியாவும், கிழக்கில் இந்தோனேசியாவும், தெற்கில் அவுஸ்ரேலியாவும், மேற்கில் மாலைதீவும் விமான வலையங்களை அமைத்துள்ளன. விமான நிலையம் மற்றும் விமான சேவை (இலங்கை) நிறுவனத்தின் சுற்றோட்ட கடல் சேவை இடத்தில் விமானங்களுக்கு தேவையான சேவை வழங்கப்படும்.
சுற்றோட்ட கடல் தொடர்பாடர் மத்திய நிலையத்தில் உள்ள உபகரணங்கள் 40 வருடத்திற்கு மேற்பட்டதாகும். இதனால் அதிகரித்துவரும் விமானங்களுக்கு சேவையை வழங்குவதற்காக நவீன உபகரண கட்டமைப்பின் தேவை ஏற்பட்டுள்ளது.
இதனால் இது வரையில் இருந்து வந்த பழமைவாய்ந்த தொடர்பாடல் கட்டமைப்பு அகற்றப்பட்டு புதிய விமான தரவு செயற்பாட்டு தரவு கட்டமைப்பொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக தரவுகளை உள்ளடக்கிய முழுமையான சேவை மேற்கொள்வதற்கு வசதிகள் வழங்கப்படும்.
புதிய தரவு செயற்பாட்டு கட்டமைப்பின் மூலம் எமது விமான வலையத்திற்குள் எத்தகைய சந்தர்ப்பத்திலும் விமானத்தை தரையிறக்குதவற்கு காட்டப்படும் சுட்டுக்களைக் கொண்ட திரை மற்றும் இலத்திரனியல் தரவு காட்சி மற்றும் இலத்திரனியல் தரவு குறிக்கப்படுவதுடன் அனைத்து தொடர்பாடல் பணிகளும் இடம்பெறும். இந்த புதிய விமான சுற்றோட்ட கட்டமைப்பின் செயற்கை செயற்பாட்டு தகவல் கோபுரம் அமைக்கப்படுகின்றது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் கடல் கப்பல் சேவை மிகவும் காத்திரமாகவும் முறையாகவும் வழங்குவதற்கு முடிவதுடன் அதன் மூலம் எமது விமான வலையத்தில் மிகவும் பாதுகாப்பான விமான செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் சர்வதேச விமான சேவைகளின் ஒழுங்குறுத்தலுக்கு அமைவாக மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் இதன் மூலம் மேம்படும்.
விமான செயல்முறை சேவைக்காக நவீன தொழில் நுட்ப அடிப்படை வசதிகளை வழங்கும் பொழுது விமான நிலையம் மற்றும் விமான சேவை (இலங்கை) நிறுவனத்தின் மூலம் இலத்திரனியல் மற்றும் விமான சுற்றோட்ட சேவை பிரிவின் தொழில்சார் ஊழியர்களின் அர்ப்பணிப்பு அடிப்படையில் முன்னெடுக்க முடிந்துள்ளது.
இந்த திட்டத்திற்காக 82 மில்லியன் ரூபா முழுமையாக விமான நிலையம் மற்றும் விமான சேவை (இலங்கை) நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டதுடன் இந்த திட்டம் வெற்றி பெறுவதற்கு சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவின் தலைமையிலும் வழிகாட்டலிலும் இடம்பெறுகின்றது.
11/04/2019 07:55:00 AM
விமான நிலைய நிறுவனத்தில் புதிய தொடர்பாடல் கட்டமைப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments: