News Just In

11/04/2019 06:24:00 PM

பல்கலைக்கழக இரண்டாம் கல்வியாண்டு மாணவன் திடீர் மரணம்


திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரழந்துள்ளார்.

புவியியல் அறிவியல் பீடத்த்தின் இரண்டாவது கல்வியாண்டில் பயிலும் குறித்த மாணவர் நேற்று திடீரென சோர்வுற்றுள்ளார்.

இதனையடுத்து மேற்படி மாணவர் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் பின் சிகிச்சைப் பலனின்றி இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர் வலப்பனை பகுதியில் வசித்து வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

No comments: