கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியினை கடக்க முற்பட்ட முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று (11) மாலை ஒலுவில் பகுதியில் இடம்பெற்ற இவ் விபத்தில் ஒலுவில்-06 ஆம் பிரிவு, தைக்கா வீதியினைச் சேர்ந்த சீனித்தம்பி இப்றாலெவ்வை என்ற 67 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: