News Just In

5/19/2026 12:54:00 PM

கைகளைக் கழுவக்கூடத் தண்ணீரில்லை! மக்களின் குருதியோடு அறுவை சிகிச்சை செய்த கொடூரம்: முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி

கைகளைக் கழுவக்கூடத் தண்ணீரில்லை! மக்களின் குருதியோடு அறுவை சிகிச்சை செய்த கொடூரம்: முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி


ஈழப் போரின் இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது எவ்வித மருத்துவ வசதிகளுமின்றிப் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காக்கப் போராடிய உன்னத மருத்துவர் துரைராஜா சண்முகராஜா (Dr. T. Shanmugarajah).

அவர் எழுதிய குருதி உறைந்த கைகள்: இறுதிப் போர்ச் சாட்சியம் (Hands Frozen in Blood) என்ற நூல், இறுதிப் போரின்போது மருத்துவப் பணியாளர்களும் தமிழ் மக்களும் எதிர்கொண்ட சொல்லொணாத் துயரங்களையும் போர்க்குற்றங்களையும் உலகிற்குச் சொல்லும் ஒரு மிக முக்கிய வரலாற்று ஆவணமாகும்.

இவ்வாறு மரணத்தின் விளிம்பில் நின்று, கைகளைக் கழுவக்கூடத் தண்ணீர் இல்லாத நிலையில் மக்களின் இரத்தக் கறையுடனேயே அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகளைச் செய்ய வேண்டியிருந்த கொடூர நிலை குறித்த பல விடயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

ஐபிசி தமிழின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மயக்க மருந்து (Anesthesia) இல்லாமல் கைகால்களைத் துண்டிக்க வேண்டிய கட்டாயம், தற்காலிக மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுகள், திட்டமிட்ட மருந்துத் தட்டுப்பாடு என உலகமே அறியாத பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

No comments: