News Just In

12/09/2025 07:14:00 PM

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு!

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு



நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள 10,076 அதற்கமைய, 9929 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 06 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகளும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: