
மாத்தளை,அம்போக்கா கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரின் உடல்களை வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கண்டுபிடித்து பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில், கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். குறித்த பகுதி முழுமையாக மண் சரிவினால் மூடப்பட்டிருந்தது.
மண்ணில் மூழ்கியிருந்த வீட்டின் இடிபாடுகளைக் கூட கண்டுபிடிக்க முடியாது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் நிலச்சரிவில் சிக்கி காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களின் உடல்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்த நேரத்தில், வீட்டில் இருந்த நாய் நிலத்தடியில் மறைந்திருந்த குடியிருப்பாளர்களைக் கண்டுபிடித்து பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
No comments: