
மற்றவர்களின் ஆடையைத் தனது சொந்த ஆடையைப் போல் அணியும் வகையில் இம்முறை பாதீட்டுத் திட்டம் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதீட்டு முன்மொழிவுக்கு பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
2025ஆம் ஆண்டுக்கான 57 பாதீட்டுத் திட்டங்களில் 29 மட்டுமே செயல்படுத்தப்பட்டன.
விவசாய மற்றும் தொழில் துறைகளில் இளம் தொழில்முனைவோரின் வளர்ச்சி கடந்த முறை 500 மில்லியனாக இருந்தது, ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
விவசாய மற்றும் இளம் தொழில்முனைவோரின் வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. கடந்த முறையில் 500 மில்லியன் ரூபாய் வாயிலாக இருந்த வளர்ச்சி இப்போது ஏற்படுத்தப்படவில்லை.
ஆவணத்தில் உள்ள மூலதன செலவின் 24% செலவிடப்படவில்லை என்றும், ஜனாதிபதி உரையில் பாதீட்டில் இடைவெளி உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த முறை பாதீடு கடந்த பாதீட்டைப் போலவே உள்ளது, அதனால் தான் இது மற்றவர்களின் ஆடையைத் தனது சொந்த ஆடையைப் போல் அணியும் பாதீடு என்று கூறுகிறேன் என சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
No comments: