News Just In

10/04/2025 01:04:00 PM

மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி சமூக ஊடகங்களில் பரப்பிய இளைஞன்


மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி சமூக ஊடகங்களில் பரப்பிய இளைஞன்


மாணவியொருவர் வகுப்பறையில் பல மாணவர்களுடன் சாதாரணமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, எடிட் செய்து ஆபாசப் புகைப்படமாக மாற்றி சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மெதியாகன பகுதியைச் சேர்ந்த 19 வயது செங்கல் தொழிலாளி எனத் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: