மண்டைதீவு, மண்கும்பான், அல்லைப்பிட்டி போன்ற பகுதிகளில் தலையாட்டிகளை கொண்டு வந்து இலங்கை இராணுவத்தினர் அட்டகாசங்களை மேற்கொண்டு பலரை கைது செய்தது மட்டுமல்லாது பலரை பின்னர் சந்தேகத்தின் பேரிலும் கொண்டு சென்றதாக வேலணை பிரதேசசபையின் உறுப்பினர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு கிணறுகளில் போடப்பட்டார்கள் என்பதுதான் தீவக மக்கள் அனைவரும் அறிந்த உண்மை.
எனவே தற்காலத்தில் ஆயுதக்குழுக்கள் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கான நீதியை மக்கள் கோருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments: