News Just In

7/13/2025 08:48:00 AM

புலம்பெயர்ந்தோருக்கு சவால் விட்ட அருண் சித்தார்த்!

புலம்பெயர்ந்தோருக்கு சவால் விட்ட அருண் சித்தார்த்



தமிழீழ விடுதலைப் புலிகளை பெருமையாக பேசும் புலம்பெயர் தமிழர்கள், போர் நடந்துகொண்டிருக்கும் போது, நாட்டை விட்டு ஓடியவர்களே என யாழ். சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உங்களின் தலைவர் உங்களை போர் புரிய அழைத்த போது, நீங்கள் ஏன் நாட்டை விட்டு தப்பி ஓடினீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், உலகளாவிய ரீதியில் இருக்கும் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை நாமும் கொண்டுவந்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என தெரிவித்துள்ளார்

No comments: