News Just In

6/27/2025 09:50:00 AM

மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மெய்வல்லுனர் சம்பியனாக தெரிவு

மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மெய்வல்லுனர் சம்பியனாக தெரிவு



நூருல் ஹுதா உமர்

இம்மாதம் 18,19ம் திகதிகளில் (18,19.06.2025) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான கல்முனை வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 13 தங்கம், 13 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்களையும் பெற்று வரலாற்றில் முதல் தடவையாக 26 போட்டி நிகழ்ச்சிகளுக்கு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பாடசாலை மாணவன் எம்.எப். உபைதுல்லாஹ் வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் 18 வயது ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் , 200 மீட்டர், 400 மீட்டர் ஆகிய மூன்று நிகழ்ச்சியில் முதல் இடங்களை பெற்று தடகள சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், மாணவர்களை வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஏ.எம். அப்ராஜ் ரிலா விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் எம்.ஏ.யு. ஷம்லி, ஏ.எம். ஜப்ரான் அவர்களுக்கும், கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபீர் (SLEAS), பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் மகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டி கௌரவித்தனர்.

No comments: