சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கடைகளில் "H -800க்கு அமைய உணவு கையாளும் நிறுவனங்களை தரநிலைப்படுத்துவதற்கான பரிசோதனை" இன்று (03) சாய்ந்தமருதில் இடம்பெற்றது
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கமையவும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதனின் தலைமையிலும் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டன.
இச் செயற்பாடுகளில் போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கடைகள் பார்வையிடப்பட்டன, கடைகளில் சுகாதார நிலைமைகள், உணவுப் பொருட்களின் பாதுகாப்பு பரிசீலனை செய்யப்பட்டது, கடை உரிமையாளர்களுக்கு சுகாதாரத் வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது, தேவையான இடங்களில் எதிர்வரும் நாட்களில் மீள்பார்வை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மக்கள் நலனை நோக்கி முன்னெடுக்கப்பட்டன. கடைகளில் சுகாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்குடன் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என சாய்ந்தமருது
சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்
No comments: